Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

பீல்ட் மார்ஷல் பதவி மைத்திரியின் சொத்து அல்ல: சரத்பொன்சேகா கொந்தளிப்பு!

Share

எனக்கு திறமை, தகைமை இருப்பதால் தான் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய சரத் பொன்சேனா எம்.பி., பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வெளிசேகர வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.

” எனது குணம் பற்றி தெரிந்ததால்தான் நல்லாட்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படவில்லை என சரத் வீரசேகர கூறினார். அது உண்மைதான். ஏனெனில் எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தால் தவறிழைத்தவர்களை தப்பிக்க விட்டிருக்கமாட்டேன்.

சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்கினால், பொன்சேகா தன்னைதான் முதலில் கைது செய்வார் என மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் அன்று அச்சம் வெளியிட்டிருந்தார். எனவே, பதவி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளவில்லை.” -என்றார்.

இதன்போது குறுக்கீடு செய்த சாந்த பண்டார எம்.பி.,

” மைத்திரிபால சிறிசேனதான் உங்களுக்கு பீல்ட்மார்ஷல் படடத்தை வழங்கினார். அந்த நன்றிகூட உங்களுக்கு இல்லையா” என கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர்,

” ஜனாதிபதி பதவியை வகித்த நபர், எனக்கு தகைமை இருந்ததால் அதனை வழங்கினார். பீல்ட்மார்ஷல் பட்டம் என்பது மைத்திரியின் பொலன்னறுவையில் உள்ள சொத்து அல்ல.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...