21 617419a735662 600x375 2
செய்திகள்இலங்கை

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Share

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே கூறியவை வருமாறு,

நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக மௌனம் காக்க முடியாது. சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்ததற்கு துறைசார் அமைச்சரும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமே பொறுப்பு கூறவேண்டும்.

மக்கள் பணத்திலிருந்து சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை வழங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட நபர்கள் தான் அதனை செலுத்த வேண்டும்.

அதேவேளை, சேதன பசளை மற்றும் திரவ உரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழு அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.” -என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....