21 61bc3f8ee6fba
செய்திகள்உலகம்

கனடாவில் துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்!!

Share

கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும், இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனவரி 12 ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மூன்று பேர் கொண்ட கும்பலால் குறித்த பெண் கடத்தி செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...