888696 186326 Sl updates
செய்திகள்இலங்கை

பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!!

Share

பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!!

பிரபல சிங்கள மொழி பாடகரும் ஜிப்சீஸ் (Gypsies) இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா (வயது-69) உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

சுனில் பெரேரா இலங்கையின் சிங்கள இசைக்குழுக்களின் முன்னோடியாக திகழ்ந்தார்.
சிங்கள மொழி இசைத்துறையில் சிறந்த பாடகராகவும் கிட்டார் வாசிப்பாளராகவும் திகழ்ந்ததுடன், பாடலாசிரியராகவும் அவர் பிரதிபலித்த ஒருவர்.

ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான சுனில் பெரேரா , குழு இசையினூடாக சர்வதேச அரங்கில் அறியப்பட்டு, இலங்கையின் நாமத்தை உலகறிய செய்தவராவார்.

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சுனில் பெரேரா, சமூக அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடியவர், தனது பாடல்களூடாக சமூக விழிப்புணர்வுக்கான விடயங்களைகருத்துக்கைளை தொடர்ச்சியாக முன்வைத்தார்.

பிட்டி கொட்டபங் நோனா, கொத்தமல்லி, மகே நேர்ஸ் நோனா உள்ளிட்ட பாடல்களூடாக சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தவரே சுனில் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...