888696 186326 Sl updates
செய்திகள்இலங்கை

பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!!

Share

பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!!

பிரபல சிங்கள மொழி பாடகரும் ஜிப்சீஸ் (Gypsies) இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா (வயது-69) உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

சுனில் பெரேரா இலங்கையின் சிங்கள இசைக்குழுக்களின் முன்னோடியாக திகழ்ந்தார்.
சிங்கள மொழி இசைத்துறையில் சிறந்த பாடகராகவும் கிட்டார் வாசிப்பாளராகவும் திகழ்ந்ததுடன், பாடலாசிரியராகவும் அவர் பிரதிபலித்த ஒருவர்.

ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான சுனில் பெரேரா , குழு இசையினூடாக சர்வதேச அரங்கில் அறியப்பட்டு, இலங்கையின் நாமத்தை உலகறிய செய்தவராவார்.

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சுனில் பெரேரா, சமூக அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடியவர், தனது பாடல்களூடாக சமூக விழிப்புணர்வுக்கான விடயங்களைகருத்துக்கைளை தொடர்ச்சியாக முன்வைத்தார்.

பிட்டி கொட்டபங் நோனா, கொத்தமல்லி, மகே நேர்ஸ் நோனா உள்ளிட்ட பாடல்களூடாக சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தவரே சுனில் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...