Hemantha Herath 700x375 1
செய்திகள்இலங்கை

மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!

Share

மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!

கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 – 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அறிகுறி நாடு இன்னும் அபாய நிலைமையில் காணப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.

எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது.

எதிர்வரும் சில நாகளுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.

ஆகவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டால் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...