download 1
செய்திகள்உலகம்

மிகப்பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் -இருபது பேர் பலி

Share

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கமென்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கமானது 5.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பல நகரங்களில் இந்த அதிர்வை உணர முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிளும் இவ்வதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின . இவ் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மிர்பூர் செல்லும் வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீதியில் சென்ற வாகனங்கள் பல கவிழ்ந்தன, சில கார்கள் வீதி இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் நின்ற மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீதிக்கு ஓடி வந்தனர்.

பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா இச் சம்பவம் பற்றி கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க இராணுவப்படைகள் மற்றும் மருத்துவக்குழுக்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனக்கூறினார்.

இந் நிலநடுக்கத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, பெரும்பாலான மக்கள் உறவுகளையும்,வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளார்கள் .
நிலநடுக்கத்தின் தாக்கம் பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.

இதை அமெரிக்க புவியியல் மையமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...