1760770586 we
செய்திகள்இலங்கை

தீபாவளிப் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பல பகுதிகளுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

Share

தீபாவளிப் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களுக்குப் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (LTC) பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று (அக்டோபர் 18) புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு 75 மேலதிகப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

நாளை (அக்டோபர் 19) கொழும்பிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு 73 மேலதிகப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த விசேட பேருந்து சேவை 24 மணி நேரமும் இயங்கும்.

மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) முதல் கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் 12 பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு, தீபாவளிக்காகப் புறக்கோட்டையில் உள்ள மகும்புர மற்றும் பாஸ்டியன் மாவத்தையிலிருந்து சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தொடருந்து திணைக்களம், இன்றும் (18) நாளையும் (19) தொடருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...