mannar vaccination card 3 600x400 1
செய்திகள்இலங்கை

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

Share

கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை !

மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கொவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அண்மைக்காலமாக கொவிட் தடுப்பூசிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. சுகாதார துறையினரும் விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வந்தனர்

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார பரிசோதகர்கள் உதவியோடு தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருவதுடன் 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களுடைய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி, வங்காலை – நானாட்டான் பிரதான வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி உள்ளடங்களாக பல்வேறு சோதனைச் சாவடிகளில் இராணுவத்தின் உதவியுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கொரோனா அட்டைகளை பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அல்லது அன்டிஜென் , பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

mannar vaccination card 1 600x400 1 mannar vaccination card 2 600x400 1 mannar vaccination card 4 750x375 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...