கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி,
நேற்றைய தினம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தளவில் காணப்பட்ட தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர். பிரயாணத்தின் போது, சந்தைகளில், பொது இடங்களில் கூடும்போது முகக்கவசம் அணியாமல் காணப்படுவதுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றத் தவறுகின்றனர்.
இதன் விளைவாகவே தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது. நிலைமையை கருத்தில் எடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment