20211119 111155 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி ஆகிவற்றின் ஆதரவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகள் வழிகாட்டல் என்பவற்றை வழங்குவதே இதன் நோக்கம்.

20211119 091250 1

அவர்களது நிலையை மேம்படுத்தி நாட்டுக்கும் அவர்களும் பலனை பெற இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத் தலைவர் மணில் ஜெயசிங்க, சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஷ்மன் அபேசேகர, நந்திக்க புத்திபால, யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் விதாதா இயக்குனர், ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா டெலிகொம் வட பிராந்திய முகாமையாளர் சிவானந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக மன்றத்தின் தலைவர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச விதாதா அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...