WhatsApp Image 2022 01 24 at 9.29.29 PM
செய்திகள்உலகம்

பொருளாதார நெருக்கடி! – உலக நாடுகளிடம் உதவி கோரும் தலிபான்கள்!!

Share

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா ,இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுக்கு உதவ முன்வந்துள்ளன. அந்த வகையில் இந்தியா அடுத்த மாதமளவில் ஒரு தொகுதி கோதுமையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் தமக்கு உதவுமாறு நோர்வே நாட்டுடன் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதற்கமைய ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையிலான குழு ஒன்று நோர்வேயை நோக்கி பயணம் ஆகியுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் உதவி கேட்டு எதிர்வரும் நாட்களில் ஒரு தூதுக் குழு ஒன்றை அனுப்ப உள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...