இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் அதிகளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது.
7 மாலுமிகளோடு பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கப்பலில் பயணம்செய்த 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a comment