drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை வியாபாரம்! – KKS இல் இளம்பெண் கைது!

Share

காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் மல்லாகம் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அவர்கள் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருகின்றனர் என அறிந்த பொலிஸார் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல நாள்களாக சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...