drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை வியாபாரம்! – KKS இல் இளம்பெண் கைது!

Share

காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் மல்லாகம் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அவர்கள் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருகின்றனர் என அறிந்த பொலிஸார் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல நாள்களாக சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...