7d6e44195d787a4c655632ff32ad29e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை சந்தேகநபர்களுக்கு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!!

Share

அக்கரைப்பற்றில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிழக்கு மாகாணத்தில் பல இடற்கயில் தங்காபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கொள்ளையடித்த தங்காபரணங்களை விற்றுள்ளதுடன், அடகு வைத்து 37 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் 37 பவுண் பெறுமதியான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் தங்காபரணங்களை அடகுவைத்துள்ள நிறுவனங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இறக்காமத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியின் பின்னர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...