நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகளே. இந்த விவசாய மக்களின் சாபம் அரசை சும்மாவே விடாது. – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை சந்தைக்கு அண்மையில் இன்றையதினம் ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
தாய் பிறந்தால் வழி பிறக்கும் என நாம் காலம்காலமாக கூறி வருகிறோம். ஆனால் தீர்வு கிடைத்தது போல் தெரியவில்லை. இருப்பினும் தற்போது தீர்வுக்கான வழி கிடைத்துவிட்டது என எண்ணுகிறேன்.
நாட்டின் விளைச்சலை அதிகரிக்க உரம் தேவை. ஆனால் இந்த அரசின் முட்டாள்தனத்தால் நாட்டில் உரம் இல்லை. இந்த நிலையில் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாளில் விவசாயிகள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டியுள்ளது – என்றார்.
#SriLankaNews