litro 1
செய்திகள்அரசியல்இலங்கை

டொலர் தட்டுப்பாடு! – துறைமுகத்தில் தேங்கி கிடங்கும் எரிவாயு சிலிண்டர்கள்

Share

சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல்உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்தவேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.

நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...