litro 1
செய்திகள்அரசியல்இலங்கை

டொலர் தட்டுப்பாடு! – துறைமுகத்தில் தேங்கி கிடங்கும் எரிவாயு சிலிண்டர்கள்

Share

சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல்உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்தவேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.

நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...