இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது.
இந்தியாவில் கோவக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரமளிக்கக் கோரியே உலக சுகாதார அiமைப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இப்பட்டியலில் இணைப்பதற்கு உலக சுகாதார அமைப்பினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இது குறித்து முடிவெடுக்கக் கூடிய நிபுணர் குழு, கோவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமானால், தடுப்பூசி குறித்து இன்னும் அதிக தரவுகளை, பாரத் பயோடெக் நிறுவனம், வழங்க வேண்டும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment