WhatsApp Image 2022 03 10 at 10.35.02 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுவிடாதீர்! – மைத்திரிக்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஆலோசனை

Share

சர்வக்கட்சி மாநாடென்பது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ‘சூழ்ச்சி’ நடவடிக்கையாகும் – என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார கூறியவை வருமாறு,

” சவரக்கத்தியில் சவரம் செய்யவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும். அதுபோலவே இந்த சர்வக்கட்சி மாநாடும். பெயரளவில் சிறந்ததாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பஸிலின் இந்த சூழ்ச்சிக்குள் அக்கப்பட்டுவிடவேண்டாம் என மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

பஸில் தனது சூழ்ச்சி நடவடிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, விமல், கம்மன்பில போன்றவர்களை வெளியேற்றியுள்ளார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...