236186059 580502976691587 1383056697636242939 n
செய்திகள்இலங்கை

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

Share

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுக்கொண்டோருக்கும் இந்த வீரியம்கூடிய டெல்டா தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என குறித்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்,

நோய் எதிர்ப்பு சக்தியை கடந்துசெல்லும் வீரியம் டெல்டா கொரோனா திரிபுக்கு உண்டு. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும் தொற்று ஏற்படுவதைத் தடுக்க மக்கள் சுகாதார வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் தற்போது தொற்று உறுதியாவோரில் 95.8 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள். தற்போது கிடைக்கப்பெறும் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

நாட்டின் சில மாகாணங்களில் உறுதிப்படுத்தப்படுவோரில் 84 முதல் 100 வீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களே. எனவே மக்கள் மிக அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...