lakshman kiriella
செய்திகள்இலங்கை

உரிமைகளை பாதுகாத்தாலே சர்வதேசத்தை வெல்லலாம்!!

Share

“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

ஆனால் அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இந்நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எல்லா அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இப்போது தொடர் தோல்விகள் ஏற்படுவதற்கும் இந்த 20 திருத்தச் சட்டமும் காரணமாகும். எனவே, ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாத்தால் மாத்திரமே சர்வதேசத்தை வெல்லமுடியும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...