imf
செய்திகள்அரசியல்இலங்கை

கடன் நெருக்கடி! – நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை?

Share

நாடு எதிர்நோக்கும் கடன் பிரச்சினையால் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தடுப்பதற்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருகின்றோம்.

கடனைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும் இலங்கை அனைத்து வழிகளையும் பரிசீலித்து வருகின்றோம்.

“சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஐஎம்எஃப் உடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருப்பதால், இது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். கூடுதலாக, மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான பணத்தை நாங்கள் கண்டறிய வேண்டும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமையால் மின்சாரத் தடைகள் மற்றும் எரிபொருள் மற்றும் பால் மா உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம். ஜூலையில் இன்னும் 1 பில்லியன் டொலர் வரவுள்ளன. ஆனால் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு ஏற்கனவே தீர்ந்துவிட்டது.

கடந்த மாதம், சீனா 1.5 பில்லியன் டொலர் ரென்மின்பி பரிமாற்றத்தை வெளியிட்டது, ஆனால் இது டொலர் மதிப்பிலான கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்த முடியாது என அவர் பைனான்சியல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...