zePBjZACouwfRR7I6vibtlity9Bo4v4J
செய்திகள்இலங்கை

இலங்கையர்களுக்கு மாலை 6 மணி வரை காலக்கெடு! – அதிர்ச்சியில் மக்கள்

Share

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இரண்டு மின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் நாடு இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த நிலையில், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...