daya
செய்திகள்இலங்கை

மஹிந்தவின் மகனுக்கு எதிராக தயாசிறி ‘அரசியல் போர்’

Share

“மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் 2022 முற்பகுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் உட்பட தேர்தலுக்கே உரிய சில அறிவிப்புகள் தெற்கு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

வடமேல் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் அறிவித்திருந்தார்.

சுதந்திரக்கட்சி கூட்டணியொன்றை அமைத்து, அழைப்பு விடுத்தால் அதனை ஏற்று களமிறங்க தயார் என்பதே தயாசிறியின் கருத்து.

இதற்கிடையில் மொட்டுக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச வடமேல் மாகாணத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடக்கூடும் என சிங்கள ஊடங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை இலக்காகக்கொண்டே குருநாகல் மாவட்டத்தில் அவர் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரோஹித்த ராஜபக்ச, உங்களுக்கு சவாலா என தயாசிறியிடம் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே,

” சவால் அல்ல. நான் வடமேல் மாகாணத்தில் பிறந்தவன். மக்கள் என்னைத்தான் ஆதரிப்பார்கள்.” – என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...