20220123 100725 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் முடக்க நிலைக்கு செல்லும் ஆபத்து! – பூஸ்டர் செலுத்துவது கட்டாயம் என்கிறார் யாழ். அரச அதிபர்

Share

மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உடைக்க சந்திப்ப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இந்த நிலையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்படும்.

யாழ் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 62 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 502 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன. 35 குடும்பங்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளன.

30 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 9 ஆயிரத்து 839 பேரும், 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56 ஆயிரம் பேரும், 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57 ஆயிரத்து 265 பேரும் தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசியை 88 ஆயிரத்து 800 பேர் பெற்றுள்ளனர். குறிப்பாக முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவரை, 30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். நாட்டில் தற்போது ஒமிக்ரோன் திரிபு பரவிவரும் நிலையில் யாழ் மாவட்டத்திலும் அது பரவுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம். எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், ‘பூஸ்டர் தடுப்பூசி வாரம்’ பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில், பாடசாலை மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இந்த நிலையில் மக்கள் அனைவரும் ஏற்படவிருக்கும் ஆபத்தை தவிர்த்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...