highway
செய்திகள்இலங்கை

நெடுஞ்சாலைகளால் உயிர் பல்வகைமை பாதிப்பு!

Share

நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக  உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக  சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள்  மோதுவதனாலும்  வாகனங்களிலிருந்து வெளியேறும்  மாசுகளாலும் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம்  வினவியபோது, ​​

அதிவேக நெடுஞ்சாலைகளில்  சில  வனவிலங்குகளால் பிரச்சினைகள் ஏற்படுவதை ஒப்புக்கொள்கின்றேன்.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளின்  இருபுறங்களிலும் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயன்படுத்தும் மரங்களை வளர்க்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சாலையின் இருபுறமும் விலங்குகளை ஈர்க்கும் மரங்கள் வளர்வதைத் தடுக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மயில்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மக்களை எச்சரிக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில வனவிலங்குகள் நெடுஞ்சாலைகளுக்கு வெளியே இறந்து பல்வேறு இடங்களில் கிடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...