laugfs gas
செய்திகள்இலங்கை

சிலிண்டர்கள் சந்தைக்கு வர தாமதமாகும்! – லாப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Share

மக்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஏறத்தாழ 3 வாரங்கள் தேவை என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவிக்கையில்,

ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் முன்னர் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் எரிவாயு நிரப்புதல் மற்றும் எரிவாயு நிரப்புதலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...