6e07f2bbd17b1daeda0d611be0ad3961 M 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிலிண்டர் வெடிப்பு : பந்துல தலைமையில் கூடிய ஆலோசனை குழு!!

Share

தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால்  நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது.

பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இதுவரை 34 சிலிண்டர்கள் வெடித்து, மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  காலந்தாழ்த்த் செயற்பட்டால் இதனால் பாதிப்புகளை குறைக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிலிண்டர்களில் பொருத்தப்படும் ஏனைய துணைகருவிகளாலும் இவ்வாறு விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கூட்ட இறுதியில் எவ்வித முடிகளும் எட்டப்படாமல் , இது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, லிற்றோ, லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை  அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...