tamilni 74 scaled
இந்தியாசெய்திகள்

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

Share

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் நகர்ந்து தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக்ஜாம் புயல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதுடன், புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் மழை குறைந்ததால் சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், புயல் தற்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்ததையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...