Saarc1
செய்திகள்அரசியல்இலங்கை

பரீட்சையின் போது கரண்ட் நிக்காதாம் – சத்தியம் செய்கிறார் தினேஸ்!!

Share

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சையின் போது மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்விலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சின் பணிப்புரையின் பேரில் பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதில் ஏற்படும் தாமதங்கள் தடுக்கப்பட்டால், பிள்ளைகளின் கல்விக்காக சுமார் ஒரு வருட கால அவகாசத்தை மீளப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...