center bank
செய்திகள்இலங்கை

திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் தளங்கள் – இலங்கை மத்திய வங்கி

Share

அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் திடீர் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தன.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் இணங்கியொழுகாத நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பணிப்புரைகளுடன் இணங்கி ஒழுகுவதற்கு குறித்த நாணயமாற்றுநர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.

தவறும் பட்சத்தில் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...