அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் திடீர் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தன.
இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் இணங்கியொழுகாத நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பணிப்புரைகளுடன் இணங்கி ஒழுகுவதற்கு குறித்த நாணயமாற்றுநர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.
தவறும் பட்சத்தில் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.
#SriLankaNews
Leave a comment