center bank
செய்திகள்இலங்கை

திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் தளங்கள் – இலங்கை மத்திய வங்கி

Share

அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் திடீர் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தன.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் இணங்கியொழுகாத நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பணிப்புரைகளுடன் இணங்கி ஒழுகுவதற்கு குறித்த நாணயமாற்றுநர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.

தவறும் பட்சத்தில் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...