Ravi Kumudesh
செய்திகள்இலங்கை

ஊரடங்கு விதிமுறை மீறல் – இலங்கையே முதலிடம்!!

Share

கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன.

இவ் விடயம் தொடர்பில், சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முடக்கம் ஒழுங்கான முறையில் இல்லாமல் நீண்ட காலத்துக்கு அமுல்படுத்தப்பட்டதால், ஊரடங்கு பற்றிய கருத்து பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

முடக்க காலத்தில் பி.சி.ஆர். மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

முடக்கம் சரியாக அமுல்படுத்தப்படாததால் நாட்டை மீண்டும் திறக்கும்படி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள்.

ஒரு அறிவியல் ரீதியான முடக்கத்தை அமுல்படுத்தினால் மட்டுமே கொரோனாத் தொற்றைக் குறைக்க முடியும் – என்றுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...