teacher 720x375 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் கற்பதற்கான சூழலை முதலில் உருவாக்குங்கள்! – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Share

மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும், ஆசிரியர் சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் 40 வீதமான மாணவர்களே கல்வியைப் பெறுகின்றனர், இந்த நிலையில் ,முழு மாணவர்களும் கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காது அரசாங்கம் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்திய பின்னர், பரீட்சைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...