teacher 720x375 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் கற்பதற்கான சூழலை முதலில் உருவாக்குங்கள்! – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Share

மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலும், ஆசிரியர் சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் 40 வீதமான மாணவர்களே கல்வியைப் பெறுகின்றனர், இந்த நிலையில் ,முழு மாணவர்களும் கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காது அரசாங்கம் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்திய பின்னர், பரீட்சைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...