அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் 11 பேருக்கு கொவிட்!!

atchu 1

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.

8 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  உட்பட 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Exit mobile version