forest officer
செய்திகள்செய்திகள்

03 மாதக் கர்ப்பிணிப் பெண் அதிகாரியைத் தாக்கிய தம்பதி!!

Share

3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரியைத் தாக்கிய தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் – சட்டாரா பகுதியைச் சேர்ந்த வன சரக பெண் அதிகாரியான சிந்து சனாப், காட்காவன் வன பகுதியில் கடமையாற்றி வருகிறார்.

3 மாதக் கர்ப்பிணியான குறித்த பெண் அதிகாரி கடமை முடிந்து வீடு திரும்பும்போது, கணவன் மற்றும் மனைவி இணைந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வன சரக பெண் அதிகாரி கூறும்போது,

பணியில் இணைந்த நாள் முதல், அந்த நபர் என்னை அச்சுறுத்துவதும், பணம் கேட்டு தொந்தரவு செய்தபோதும், நான் அதற்கு அஞ்சவில்லை. நேற்றைய தினம் எனது கடமையை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது, என்னைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், எனது கணவரையும் காலணிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள ராமசந்திர ஜான்கர், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராகவும், உள்ளூர் வன குழு உறுப்பினராகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...