Bandula Gunawardena
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு ஸ்தம்பிதமடையப்போகிறது: மனம் திறந்த வர்த்தக அமைச்சர்!-

Share

நாடு முழுவதும் ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்படுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நியச் செலாவணி முகாமைத்துவம் காரண மாக டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.

கொரோனா எதிரொலி காரணமாக நாட்டின் நிலைமையானது பாரதூரமாக மாறியுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இலங்கை டொலர்களை அச்சிட முடியாது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது போனால், முழு நாடும் ஸ்தம்பித்தமடையும் என எச்சரிகை விடுத்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kk
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிலாபம் வைத்தியசாலை வெள்ளத்தால் ரூ. 1,200 மில்லியனுக்கு மேல் சேதம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலைக்கு (Chilaw General Hospital) ரூ. 1,200...

25 6937fdd054d95
இலங்கைசெய்திகள்

பேரழிவு நிவாரணப் பணிகளில் குளறுபடிகள்: கிராம சேவகர்கள் மீதும் மக்கள் குற்றச்சாட்டு!

அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

1000145332
உலகம்செய்திகள்

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது: ஈரானிய ஒடுக்குமுறைக்கு சர்வதேசக் கண்டனம்!

2023ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை (Narges...

25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...