death
செய்திகள்இலங்கை

கொரோனாவால் 22 வயது பெண் சாவு! – பருத்தித்துறையில் சம்பவம்

Share

பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்த 22 வயது இளம் பெண் உட்பட இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மூன்று நாள்களாகக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

சுவாசிப்பதற்குச் சிரமப்பட்ட நிலையில், இன்று காலை  மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆயினும் மருத்துவர் பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுப் பெண்ணொருவர் மந்திகை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டுவரப்பட்டார்.

அவர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...