death
செய்திகள்இலங்கை

கொரோனாவால் 22 வயது பெண் சாவு! – பருத்தித்துறையில் சம்பவம்

Share

பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்த 22 வயது இளம் பெண் உட்பட இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மூன்று நாள்களாகக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

சுவாசிப்பதற்குச் சிரமப்பட்ட நிலையில், இன்று காலை  மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆயினும் மருத்துவர் பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுப் பெண்ணொருவர் மந்திகை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டுவரப்பட்டார்.

அவர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...