event
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனா கால பணி – ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு

Share

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

“பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தொற்றின் போது உயிர் நீர்த்தவர்களுக்கு ஒரு நிமிட மெளன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பெருந்தொற்றின் போது செயற்பட்ட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கொவிட் தொற்று காலத்தின் மனித நேயப்பணிகளை முன்னெடுத்த வைத்தியர்கள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...