lions covid
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா!

Share

சிங்கப்பூரில் 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தெற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

523 பேர் சாவடைந்துள்ளனர் .

கொரோனா வைரஸ் மனிதனை மட்டுமல்ல மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா துரு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆப்பிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை திறந்தவெளியில் விட்டு இருந்தார்கள்.

மக்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று இவற்றை பார்வையிடவும் முடியும் .

அதில் ஆசிய வகை சிங்கங்கள் சில சோர்வாக காணப்பட்டன.

சளி பிடித்து தும்மியபடியும் இருந்தன.

எனவே சிங்கங்களுக்கு சோதனை நடத்தினார்கள்.

அதில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய தெரிய வந்துள்ளது.

ஆனாலும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நன்றாக உணவு சாப்பிடுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் .

அத்தோடு ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாமே சந்தேகித்து அதற்கும் பரிசோதனை நடாத்தி வருகிறார்கள்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2c8a8047e8
செய்திகள்இலங்கை

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து...

1736086372 accident 2
செய்திகள்இலங்கை

வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்களால் 58 பேர் பலி! இந்த ஆண்டு பலி வீதம் அதிகரிப்பு!

வவுனியாவில் (Vavuniya) 2021ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களினால் 58 பேர்...

MNR NANATTAN ISSUE 3
செய்திகள்இலங்கை

ஆஸ்திரேலிய முதலீட்டாளரை மோசடி செய்த விவகாரம்: மன்னாரில் இருவர் கைது, விளக்கமறியலில்!

மன்னார் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை...

25 68fc25278cbb0
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் தொலைபேசியில் என் பெயர் எவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ளது? – நாமல் ராஜபக்ச நகைச்சுவைப் பதில்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் எவ்வாறு...