யாழில் கொமர்ஷல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று!
செய்திகள்இலங்கை

யாழில் கொமர்ஷல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று!

Share

யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றுகின்ற 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் ஆகியோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 12 பேருக்கு கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு நிரந்தரமாக கடமையாற்றுபவர்கள் தவிர்த்து வேறு கிளைகளில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி சுகாதார நடைமுறைகளை பேணி கிளை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...