Stalin 1
செய்திகள்இந்தியா

கொரோனா அச்சமொழித்தார் ஸ்ராலின்- மக்கள் புகழாரம்!

Share

இந்தியாவில் எவ்வித கொரோனா அச்சமுமின்றி வெளியே துணிச்சலாக நடமாட முடிவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்ராலின், தினமும் பொதுவெளியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பொதுவெளியில் அவரைக் காணும் மக்கள், அவரது ஆட்சி குறித்துப் பாராட்டி வருகின்றனர்.

ஸ்ராலின் மிகவும் திறமையாக ஆட்சி செய்வதாகவும், கொரோனா விவகாரத்தில் அவர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு, சிறப்பாக அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும், அவரை நேரில் சந்திக்கும் மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நேற்றையதினம் தமிழக முதலமைச்சர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரைச் சந்தித்த பொதுமகன் ஒருவர், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைச் சரிவர முதல்வர் வழங்கியதாலேயே, அச்சமின்றி வெளியில் நடமாட முடிவதாகக் குறிப்பிட்டார்.

அவரைப் போன்றே நடைபயிற்சியில் ஈடுபட்ட பலரும் முதலமைச்சரை வாழ்த்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...