இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் லைத்து இந்திய மீனவர்கள் 43 பேர் ஆறு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காத காரணத்தால் மீனவர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டார்.
#SrilankaNews