image ba58952b48
செய்திகள்இலங்கை

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்!

Share

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எதுவித சூழல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கரையோரப் பாதுகாப்பு சட்டமூலத்தின்படி, கரையோரத்தை அண்டிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதற்காகக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும். ஆனால், மண்டைதீவு கிரிக்கெட் மைதான நிர்மாணத்தில் இவ்வாறான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

இதனால், இந்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த சூழல் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக, மண்டைதீவின் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை அடியோடு இடைநிறுத்துமாறு குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...