image ba58952b48
செய்திகள்இலங்கை

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்!

Share

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எதுவித சூழல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கரையோரப் பாதுகாப்பு சட்டமூலத்தின்படி, கரையோரத்தை அண்டிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதற்காகக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும். ஆனால், மண்டைதீவு கிரிக்கெட் மைதான நிர்மாணத்தில் இவ்வாறான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

இதனால், இந்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த சூழல் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக, மண்டைதீவின் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை அடியோடு இடைநிறுத்துமாறு குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...