EKcaopZU8AADyHd
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பு தலைமைகள் ஆதரவு – உறுப்பினர்கள் எதிர்ப்பு!!

Share

யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

16 உறுப்பினர்களும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முதல்வர் மணிவண்ணன் மீது ஆதாரத்துடன் சுமத்தினார்கள்.

இந்நிலையில், கட்சித்தலைமைகள் பாதீட்டை ஆதரிப்பதென முடிவு எடுக்கும் நிலையில் இருந்தாலும், உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு ஒத்துப்போகவில்லை.

அத்துடன், யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவன்ணன் தமிழரசு கட்சித்தலைவர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பாதீட்டை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் களம் இறங்கியுள்ளதாகவும் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்.மாநகரசபையின் பாதீட்டில் மணிவண்ணன் அணியினருடன் ஈ.பி.டி.பி ஆதரவு அளிக்கும் எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்பில் வாக்களிப்பு இடம்பெறும் கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...