EKcaopZU8AADyHd
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பு தலைமைகள் ஆதரவு – உறுப்பினர்கள் எதிர்ப்பு!!

Share

யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

16 உறுப்பினர்களும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முதல்வர் மணிவண்ணன் மீது ஆதாரத்துடன் சுமத்தினார்கள்.

இந்நிலையில், கட்சித்தலைமைகள் பாதீட்டை ஆதரிப்பதென முடிவு எடுக்கும் நிலையில் இருந்தாலும், உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு ஒத்துப்போகவில்லை.

அத்துடன், யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவன்ணன் தமிழரசு கட்சித்தலைவர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பாதீட்டை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் களம் இறங்கியுள்ளதாகவும் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்.மாநகரசபையின் பாதீட்டில் மணிவண்ணன் அணியினருடன் ஈ.பி.டி.பி ஆதரவு அளிக்கும் எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்பில் வாக்களிப்பு இடம்பெறும் கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...

14 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த உயர்மட்டக் குழு ஆலோசனை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும்...

17 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படும் என்ற தகவலை நிராகரித்தது எரிசக்தி அமைச்சு!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும்...

16 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் குறித்து எச்சரிக்கை: ஆயுர்வேத மருத்துவ சபை அறிக்கை!

ஆயுர்வேத மருத்துவ சபையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில்...