sathiyamoorthy
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியசாலைக்கு தாமதமாக வாருங்கள்! – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவுறுத்து

Share

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவோர் தாமதமாக வைத்தியசாலைக்கு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. யாழ்ப்பாணத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையிலையிலேயே வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெறுவதற்கு வருவோரிடம் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆகியவை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவு பகுதிகளின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், கிளினிக் மற்றும் இருதய சிகிச்சை கிளினிக் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் சிகிச்சைகள் தற்போது இடம்பெறவில்லை.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு சாதாரண சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருவோர் மலை குறைவடைந்து பின்னர் வருகைதருவதன் மூலம், அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்காது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெற்று வருகின்றன – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...