01 Do
செய்திகள்அரசியல்இலங்கை

முடிந்தால் சபைக்கு வாருங்கள்! – சஜித்துக்கு சவால்!!

Share

முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன் என    கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே  அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார். போஸ்டர்களை ஒட்டவும், பிரச்சாரம் செய்யவும் அவர் பெரும் தொகை நிதியை செலவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் அந்த நபர் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை காரணமின்றி செலவுசெய்துள்ளார்.

தற்புகழுக்காக எவரும் இவ்வளவு நிதியை செலவிடமாட்டார்கள். எனவே, இது பற்றி விசாரிப்பதற்கும் தெரிவுக்குழு அவசியம்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தொடர்பில் 6 ஆம் திகதி சபையில் விவாதம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் சபையில் இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். அப்போது இவற்றை அம்பலப்படுத்துவேன். ஆடையின்றி வெளியேற வேண்டிய நிலையே எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்படும் என தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...