IMG 20211121 WA0075
செய்திகள்இலங்கைபிராந்தியம்

‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

Share

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் இந்த குண்டு மீட்கப்பட்ட நிலையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.

IMG 20211121 WA0069 IMG 20211121 WA0076

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
l90920260121101853
செய்திகள்உலகம்

ஜனாதிபதி ட்ரம்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: வாஷிங்டனுக்கு அவசரமாகத் திரும்பியது!

சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force...

25095672 tn8
செய்திகள்உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு புடினுக்கு ட்ரம்ப் அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில்...

images 6 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்: வேலணை பிரதேச சபையில் உறுப்பினர் அனுசியா கடும் எச்சரிக்கை!

உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின்...

images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...