Cinema returns 1. L styvpf
செய்திகள்உலகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு – சோமாலியாவில் சம்பவம்!

Share

சோமாலியா என்றதும் முதலில் ஞாபகம் வருவது வறுமை, பட்டினி போன்ற விடயங்கள் தான்.

இந்நாடு தற்போதும் உள்நாட்டுப்போர், வறுமை போன்றவற்றில் சிக்கித்தவிக்கிறது.

இங்கு தற்கொலைபடை தாக்குதல் காரணமாக 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இந் நிகழ்வு தொடர்பாக, “இந்த இரவு சோமாலியா மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு” என தியேட்டர் இயக்குனர் அப்திகாதிர் அப்தி யூசுப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பல வருட சவால்களுக்கு பிறகு இச்சம்பவம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதுடன் சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிக் காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி...